“மணம் வீசாத மல்லிகை பூ”
மோகம் கொண்ட மேனி இது
சோகத்தில் வாடுது
தூது சென்ற மேகம் எல்லாம்
தூசியா போகுது
தண்ணிக்குள்ள நானிருந்தும்
தேகம் தாகத்தில வாடுது
தங்கம் இன்றி போனாதால்
தாலிக்கு ஏங்குது
ஆசை வந்து அசைக்கிது
அடி மனசு அழுவுது
காசின்றி போனதால
கண்ணீர் வடியுது
பூச்சூடும் நாள் எல்லாம்
பூ வாசம் பிடிக்கவில்லை
பூவாக நான் இருந்தும்
வாசனை வீசவில்லை
வாசலுக்கு வந்தவுக
வாசனையை பாக்கலையே
வசதிய பார்த்தாக
வண்டியத்தான் கேட்டதாக
பூக்கும் முன்னால பூச்சூடி இருந்தேனே
பூத்த பின்னால பூநாகம் ஆனேனோ!!
மோகம் கொண்ட மேனி இது
சோகத்தில் வாடுது
தூது சென்ற மேகம் எல்லாம்
தூசியா போகுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக