கண்ணாலே காதலுக்குக் ஓகே சொன்னாளே
தனியாக என்ன பார்த்து அவள் சிரிக்காளே
டால்பின் மீன போலக் குதிக்க வைத்தாளே!
தன்னாலே தந்தன தந்தான
தாளம் போட வச்சியே!
தன்னாலே தந்தன தந்தான
தாளம் போட வச்சியே!
ஊருக்குள் ஓடும் ஊர்திகள் எல்லாம்
உன் பெயரைத் தானே சொல்லுதடி
உதட்டு ஓரம் ஓடும் உன் சிரிப்பு
உள்ளுக்குள் ஏதேதோ பண்ணுதடி!
சல்லடையா இருந்த என் இதயம்
சக்கரமா சுற்றுத்தடி உன் பின்னாலே
அமைதியா கிடந்த என் இதயம்
ஆகாயத்தில் பறக்குதடி உன் பின்னாலே!
(தன்னாலே...)
ஊரைச் சுற்றின என்னை
உன்னைச் சுத்த வச்சுட்டியே
உன்னைச் சுற்றின எல்லாரையும்
ஓரம் கட்டி வச்சிட்டியே!
ஒன்றுக்கும் ஆகாமல் கிடந்த என்னை
ஒளிவிளக்காக மாற்றிடியே!
கன்னக்குழி சிரிப்பாலே கட்டிப் போட்டாளே
கண்ணாலே காதலுக்குக் ஓகே சொன்னாளே
தனியாக என்ன பார்த்து அவள் சிரிக்காளே
டால்பின் மீன போலக் குதிக்க வைத்தாளே!
வள்ளலார்மாணவன்-NA.GA
ஒச்சத்தேவன்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக