நல்லவரே வல்லவரே
சிற்சபையின் நாயகரே
சிந்தனையில் நீ இருக்கச்
சிறப்புதானே எந்நாளும்
சிறியோனின் சிந்தனையில்
சிறுதுளியாய் வந்தவரே
பிறப்பு வலி நீங்கிடவே - ஞான
சிறப்பு வழி தந்தவரே
சிற்சபை நாயகரை
சீக்கிரமே கண்டுகொள்ள - தயவின்
சிறப்பெல்லாம் தந்தவரே
பொற்பாதம் பற்றிடவே -எமக்குப்
பொன்னான வாழ்வளித்தாய்
பொற்பாதம் பற்றிடவே -உன்
பொன்னடியைத் தேடுகின்றேன்
பொற்பாதம் பற்றிவிட்டால் -அடியேன்
பொன் தேகம் பெற்றுடுவேண்
பொருள் தேடும் உலகினிலே
அடியேன் போடாத வேசம் ஏது
அருள் தேடும் உள்ளத்தாலே
உன்னை நினையாத நாளேது
வேசத்தைக் களைத்திடவே -அடியேன்
வேண்டியதை அருள்வாயே
வேசத்தைப் பார்க்காதே -அடியேன்
வேண்டியதைப் பார்த் தருள்வாயே!
அருட்பயணம் இது அன்பின் பயணம்
✍🏼வள்ளலார் மாணவன்
சாயல்குடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக