சனி, 17 அக்டோபர், 2020

உன் பொன்னடியைத் தேடுகின்றேன்












நல்லவரே வல்லவரே
சிற்சபையின் நாயகரே
சிந்தனையில் நீ இருக்கச்
சிறப்புதானே எந்நாளும்

 சிறியோனின் சிந்தனையில் 
சிறுதுளியாய் வந்தவரே
பிறப்பு வலி நீங்கிடவே - ஞான 
சிறப்பு வழி தந்தவரே
சிற்சபை நாயகரை
சீக்கிரமே கண்டுகொள்ள - தயவின்
சிறப்பெல்லாம் தந்தவரே

பொற்பாதம் பற்றிடவே -எமக்குப் 
பொன்னான வாழ்வளித்தாய்
பொற்பாதம் பற்றிடவே -உன் 
பொன்னடியைத் தேடுகின்றேன் 
பொற்பாதம் பற்றிவிட்டால் -அடியேன் 
பொன் தேகம் பெற்றுடுவேண்

பொருள் தேடும் உலகினிலே  
அடியேன் போடாத வேசம் ஏது
அருள் தேடும் உள்ளத்தாலே 
உன்னை நினையாத நாளேது
வேசத்தைக் களைத்திடவே -அடியேன்
 வேண்டியதை அருள்வாயே 
வேசத்தைப் பார்க்காதே -அடியேன் 
வேண்டியதைப் பார்த் தருள்வாயே!

   அருட்பயணம் இது அன்பின் பயணம் 
   ✍🏼வள்ளலார் மாணவன் 

சாயல்குடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...