சனி, 10 அக்டோபர், 2020

உன் பொன்னடியைத் தேடுகின்றேன்

 

நல்லவரே வல்லவரே

சிற்சபையின் நாயகரே

சிந்தனையில் நீ இருக்கச்

சிறப்புதானே எந்நாளும்!

 

சிறியோனின் சிந்தனையில் 

சிறுதுளியாய் வந்தவரே

பிறப்பு வலி நீங்கிடவே - ஞான

சிறப்பு வழி தந்தவரே

சிற்சபை நாயகரைச்

சீக்கிரமே கண்டுகொள்ள - தயவின்

சிறப்பெல்லாம் தந்தவரே!

 

பொற்பாதம் பற்றிடவே -எமக்குப் 

பொன்னான வாழ்வளித்தாய்

பொற்பாதம் பற்றிடவே -உன் 

பொன்னடியைத் தேடுகின்றேன் 

பொற்பாதம் பற்றிவிட்டால் -அடியேன்

பொன் தேகம் பெற்றுடுவேண்!  

 

பொருள் தேடும் உலகினிலே  

அடியேன் போடாத வேசம் ஏது

அருள் தேடும் உள்ளத்தாலே 

உன்னை நினையாத நாளேது

வேசத்தைக் களைத்திடவே -அடியேன் 

 வேண்டியதை அருள்வாயே 

வேசத்தைப் பார்க்காதே -அடியேன் 

வேண்டியதைப் பார்த் தருள்வாயே!

                                                                         வள்ளலார்மாணவன்

ஒச்சத்தேவன்கோட்டை

SAYALGUDI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...