வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

மக்களாட்சியில் மக்கள் vs தலைவர்கள்:

 78வது சுதந்திர தினமான இன்று மக்களாட்சியில் "#மக்களும் vs #தலைவர்களும்" யார் நாட்டை முன்னேற்றுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.


#மக்களாட்சியில் #மக்கள் vs. #தலைவர்கள்: 

ஒரு சிக்கலான உறவு மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம் மக்கள் ஆட்சி என்பதுதான். ஆனால், நம் நாட்டில் மக்களும் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, நாட்டின் முன்னேற்றம் தடைபடுவது வருத்தத்திற்குரியது. இந்தச் சிக்கலை ஆழமாக ஆராய்ந்து, ஒரு தீர்வை நோக்கிச் செல்வோம்.


மக்கள் ஏன் தலைவர்களை குறை கூறுகிறார்கள்?


#பொறுப்புணர்ச்சி #இல்லாமை: தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுதல், ஊழல், குடும்ப ஆட்சி போன்றவை மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணங்கள். நாட்டை ஆள்கிறவர்களும், மாநிலத்தை ஆள்கிறவர்களும் உலக வங்கியில் இருந்து கடன் மேல் கடன் வாங்கி தங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய ஆதரவு நிறுவனங்களுக்கும் பெரும் சலுகை அளித்து, நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி இல்லாமல் தங்களை சார்ந்தவர்கள் முன்னேறினால் போதும் என்ற ஒரு சமநிலை இல்லாத தன்மையில் செயல்படுவது, மக்களிடம் அதிர்ப்புத்தியை ஏற்படுத்தும், ஏற்படுத்துகிறது.


#நீதி_இல்லாமை: சட்டம் சமமாக அனைவருக்கும் பொருந்த வேண்டும் என்ற போதிலும், சில தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களைப் பாதுகாத்து, எதிரிகளை ஒடுக்குவது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. 


ஆளும் தரப்பை சார்ந்தவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை கண்டு கொள்வதில்லை, அதன் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. எதிர் தரப்பில் உள்ளவர்கள் ஆளும் தரப்பினர் செய்கின்ற தவறை சுட்டிக்காட்டினால் கூட அவர்களின் மீது நடவடிக்கை பாய்கிறது. அவர்களை கைது செய்து கருத்து சுதந்திரத்தை கழுத்தை நெரிப்பது போன்று செய்வது, மக்கள் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையை இழக்க செய்கிறது. நிகழ்காலத்தில் #திமுக & #BJP அரசு மிக அதிகமாக கருத்து சுதந்திரத்தை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது.


#வளர்ச்சி_இல்லாமை: நாட்டின் பொருளாதாரம், சமூக நலன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் முன்னேற்றம் இல்லாததால் மக்கள் தலைவர்களை குறை கூறுகிறார்கள். 


வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முறையாக பயன்படுத்துவது இல்லை. தலைவர்கள் சரியாக இல்லாததால் 60% பணம் ஊழலுக்காக போய்விடுகிறது மீதம் இருக்கிற 40% பணத்தை வைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள், அதுவும் சரியாக சென்றடைகிறதா என்று அவர்கள் முறையாக கண்காணிப்பதும் இல்லை! என்ற குற்றச்சாட்டு நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளாகியும் இன்றும் தொடர்கிறது என்பது மக்களின் மனக்குமுறல்.


தலைவர்கள் ஏன் மக்களை குறை கூறுகிறார்கள்?

#மக்களின் #அறிவின்மை: மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி போதுமான அளவு அறிந்திருக்கவில்லை என்றும், தவறான தகவல்களால் ஏமாறுகிறார்கள் என்றும் சில தலைவர்கள் வாதிடுகின்றனர்.


மக்களின் செயலற்ற தன்மை: மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக போராடாமல், அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருப்பது தலைவர்களின் பொறுப்பை குறைக்கிறது. 


#மக்கள்_பிரதிநிதிகளின்_தவறுகள்: மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் சரியாக செயல்படாததால், தலைவர்கள் மக்களை குற்றம் சாட்டுகின்றனர்.


#யார்_யாரை_சரி_செய்ய_வேண்டும்?


#தலைவர்கள்: மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்காக உழைக்க வேண்டும். ஊழலை ஒழித்து, நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும்.


#மக்கள்: தங்கள் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு பெற்று, தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

" தற்பொழுது உள்ள அரசுகள் மக்களை போராடவே விடுவதில்லை என்பது அவமானத்திற்குரிய செயல்"


#பிரதிநிதிகள்: மக்களின் குரலாக செயல்பட்டு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.


நாட்டை முன்னேற்ற யார் வழிகாட்ட வேண்டும்?


நாட்டை முன்னேற்ற வழிகாட்டும் பொறுப்பு மக்கள், தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும்.


#தீர்வு என்ன?

கல்வி: மக்களுக்கு நல்ல கல்வி அளித்து, அவர்களின் அறிவை வளர்க்க வேண்டும்.


#ஊடக_சுதந்திரம்: ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தர வேண்டும்.


#சட்ட_வழிமுறைகள்: சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


#பொது_விவாதங்கள்: மக்கள் பிரச்சினைகள் குறித்து பொது விவாதங்கள் நடத்தி, தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.


#நம்பிக்கை: மக்கள் மற்றும் தலைவர்கள் ஒருவரையொருவர் நம்பும்போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும்.


மக்களாட்சி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. மக்கள் மற்றும் தலைவர்கள் இருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, நாட்டு வளங்களை பாதுகாத்து, ஒன்றாக இணைந்து செயல்படும் போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும்.


அன்புடன்

வள்ளலார் மாணவன் நாகநாதன்

அடி மனசு அழுகிறது

உதடு சிரிக்கிறது 


veetutamil. Googleuser


மோகம் கொண்ட மேனி இது

தாகத்தில் வாடுது

தூது சென்ற மேகங்கள் எல்லாம் 

தூசியா போகுது


தண்ணிக்குள்ள நானிருந்தும் 

தேகம் தாகத்தில் வாடுது

தங்கம் இன்றி போனதால் 

தாலிக்கு ஏங்குது


ஆசை வந்து அசைக்கிறது 

 அடி மனசு அழுகிறது

காசின்றி போனதால்

 கண்ணீர் வடியுது


பூச்சூடும் நாட்கள் எல்லாம் 

பூவின் வாசம் பிடிக்கவில்லை

பூவாக நான் இருந்தும் 

வாசனை வீசவில்லை


வாசலுக்கு வந்தவர்கள் 

வாசனையை பாக்கலையே 

வசதிய பார்த்தார்கள்

வண்டியைத்தான் கேட்டாங்க


மோகம் கொண்ட மேனி இது

தாகத்தில வாடுது

தூது சென்ற மேகங்கள் எல்லாம் 

தூசியா போகுது


பூத்த பின்னால பூநாகம் ஆனேனோ!

பூக்கும் முன்னால பூச்சூடி இருந்தேனே!.


கவிதையின் கரு : சமூக விழிப்புணர்வு.

இக்கவிதை,பொருளாதார உலகில் ( வரதட்சணையால்) மனித உறவுகளின் மதிப்பு குறைந்து போனதைப் பற்றியும், பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சலைப் பற்றியும் பேசுகிறது. பொருள் இல்லாத காரணத்தால் ஒரு பெண் எவ்வாறு மதிக்கப்படாமல் போகிறாள் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது.


கவிதையைப் பிடிப்பவர்கள் எளிமையாக உள்வாங்கிக் கொள்வதற்காக கவிதை பகுப்பாய்வு.

உணர்ச்சிபூர்வமான வரிகள்: கவிதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் மன உளைச்சலை வாசகர் மிக எளிதாக உணர முடியும்.

சமூக விழிப்புணர்வு: பொருளாதாரம் இல்லாததால சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியான உருவகங்கள்: பூவை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, அவளது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை விவரித்துள்ளது.

சில இடங்களில் சொல்லாட்சி: சில வரிகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லாட்சியாக அமைந்துள்ளது.


இக்கவிதை ஒரு சிறந்த கவிதை. இது சமூகத்தில் நடைபெறும் சில பிரச்சினைகளை நம் கண் முன் நிறுத்துகிறது. இக்கவிதை பலருக்கு உத்வேகம் அளிக்கும்.


இந்த கவிதை பிடித்திருந்தால் பகிருங்கள். 


 நாகா

நன்றி.


#கவிதை #பெண் #காதல் #ஏக்கம் #பொருள் #பணம் #கல்யாணத்திற்காக #காலம் #கடந்தும் #காத்திருப்பு

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை - கரிசலாங்கண்ணி

 தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை - #கரிசலாங்கண்ணி


சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.


இந்த கரிசாலை என்னுடைய வாழ்நாளில் எந்த அளவு ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது என்று நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.


இந்த கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய் (AML - Acute Myeloid Leukemia)

போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.


இந்த கரிசாலை எனது மருத்துவ ஆய்வில் மிக பெரிய வெற்றி கொடுத்துள்ளதை கீழே விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.


இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள். பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள். 


 "கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்" என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.



*தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்*

*தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்*

*தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை*

*தின்ற கரிசாலை சிதையாது இவ்வாக்கையே!!!*

                     *- திருமூலர்*


மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:


திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை

யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம் 

பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத் 

தன்னாகத் தின்றாகத் தான்.


விளக்கம் :

இம்மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் பேற்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும்



வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:


குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை 

யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன

மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்

கையாந்தகரை யொத்தக்கால்

                                                   (தேரன் வெண்பா)


விளக்கம் :

இவ் வெள்ளை கரிசாலையை எடுப்பதால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் இரத்த சோகை அல்லது உடலின் உறுப்புகளின் வீக்கம் இருக்காது. முக்கியமாக 18 வகையான காமாலை நோய் தீரும். மேலும் குரலுறுப்பு நோய் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். இவ் வெள்ளை கரிசாலை சிறிது கார சுவை உடையது. பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.


WHO என்று சொல்லப்படும் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பில் குணமாகாது என்று குறிப்பிட்ட பல நோய்களில் ITP (Idiopathic Thrombocytopenic Purpura) என்பது வெள்ளை அனுக்களே 

சிகப்பு தட்டணுக்களை அளிக்கக்கூடிய ஒரு வகையான Autoimmune Disease ஆகும்.


அப்பேற்ப்பட்ட வியாதியை நமது வள்ளல்பெருமனார் சொன்ன இந்த ஞான மூலிகை உடன் தூதுவளை கலந்து கொடுக்கையில் 25 நாட்களில் குணமடைந்தது.


17 வருடமாக இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்தை கொடுக்கையில் 25 நாளில் முழுவதுமாக குணமடைந்து. இதை வைத்தே கரிசாலை மற்றும் தூதுவளை காயகல்ப மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணரலாம்.


அதுமட்டுமன்றி சமீபத்திய ஆய்வில் இந்த கரிசாலையில் Gold nanoparticles என்று சொல்லப்படும் தங்க நானோ துகள்கள் உள்ளது. அதேபோன்று தூதுவளையில் Silver nanoparticles என்று சொல்லப்படும் வெள்ளி நானோ துகள்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதை நிருபிக்கும் ரூபமாக சில மாதத்திற்கு தமிழகத்திற்கே சவாலாக விளங்கிய டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க்கொல்லி நோய் என்பதை அனைவரும் அறிந்ததே. டெங்கு காய்ச்சல் பல உயிர்களை கொன்று குவித்தது. உயிர் பிறிய முக்கிய காரணமாக பங்கு வகித்த Platelets என்று சொல்லப்படும் இரத்த தட்டணுக்கள் குறைந்தது தான். இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்த Allopathy என்ற ஆங்கில மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்தினால் காப்பாற்ற முடியும். இதை ஆய்வு செய்து பார்க்கையில் கரிசலையின் உதவிக்கொண்டு ஒரே நாளில் சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலை சாறு கலந்து கொடுக்கையில் ஒரே நாளில் 50,000 எண்ணிக்கையில் உள்ள தட்டணுக்கள் 1,50,000-மாக உயர்ந்து தட்டணுக்கள் அதிகமானது தெரியவந்துள்ளது. இக்கரிசாலைக்கொண்டு காய்ச்சலை குணப்படுத்த முடிந்தது. குணமடைய இக்கரிசாலை பெரும் பங்கு வகித்ததை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

இந்த கரிசாலை இளநீரை வைத்தே டெங்குவால் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றிள்ளேன். இவை அனைத்திற்கும் மூலக்காரணம் வள்ளல்பெருமானே... அவர் கூறிய இந்த ஞான மூலிகையை வைத்து மருந்து செய்கையில்

புற்றுநோய் அல்லாமல் 

 Liver Cirrhosis என்று சொல்லக்கூடிய கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இவ் கரிசாலைக்கு உண்டு.


சித்தர்கள் மற்றும் சத்த வைத்தியர்கள் தங்களது மருந்துகளில் குரு மருந்து என்று சொல்லக்கூடிய மருந்திற்க்கு எல்லாம் குருவாக விளங்கக்கூடிய மருந்தை கலந்து தான் மருத்து தயாரிப்பாளர்கள். இக்குரு மருந்தின் ஆற்றல் மருந்தின் வீரீயத்தை 1000 மடங்கு அதிகமாக்கும். ஒவ்வொரு சித்தர்களும் தங்களுக்கென்று உரிய பானியில் சில குரு மருந்தை சூரணத்தில் கலந்து அம்மருந்தின் வீரீயத்தை அதிகப்படுத்துவார்கள். அதுபோன்று எந்த நோயாக இருந்தாலும் அதில் அவர் அவர்களுக்கு என்று இருக்கும் குரு மருந்தை கலப்பார்கள்.

என் வாழ்நாளில் குரு மருந்து என்று ஒன்று கேட்டால் நிச்சயமாக கரிசாலை தான் முதலிடம் பெற்றுள்ளது. பஷ்பங்கள் மற்றும் செந்தூரங்களைவிட, வள்ளலார் சொன்ன ஞான மூலிகையான கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி தான் சிறந்ததாக இடம்பெற்றுள்ளது. பொதுவாக கல்லீரல் 300க்கு மேற்பட்ட வேலையை செய்கின்றது. இரத்தத்தை சுத்தம் செய்வதில் இருந்து பித்தநீரை வெளியேறும் வரை பல வேலைகளை செய்கிறது. 


இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் தேவையைவிட குறைந்தால் உயிர் பிரிய நேரும். ஆனால் கரிசாலைக்கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முடியும்.


உடலின்சக்தி (ATP)

சேமித்து வைக்கும் ஓர் உறுப்பு கல்லீரலே... அப்பேற்ப்பட்ட கல்லீரல் பாதிப்படைந்தால் ராஜ உறுப்புகளான சிறுநீரகம், இதயம், மண்ணீரல், கணையம் இன்னும் பல உறுப்புகள் பலவீனமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆகவே நான் எந்தவித மருந்து தயாரித்தாலும் அதில் எனது ஒரு குரு மருந்தான கரிசாலை நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இதனால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு மூலக்காரணமாக உள்ள உறுப்பை தூண்டி நன்கு வேலை செய்ய வைக்கும்.

காச நோய், சக்கரை நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் கரிசாலை முக்கிய பங்களிப்பு தந்துள்ளது என்பது எனது ஆய்வில் தெரியவந்துள்ளது.


கரிசாலை கல்லீரல் சம்மந்தப்பட்ட அனைத்து நோயையும் குணமாக்கும். முக்கியமாக மஞ்சள் கரிசாலையை ஆட்டுப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்கையில் மகோதரம் என்று சொல்லக்கூடிய கல்லீரல் பாதிப்படைந்து வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் சித்தர்கள் சொன்ன 18 வகையான காமாலைகளுக்கும் இக்கரிசாலை சிறந்த மருந்து. இதேபோன்று கரிசாலையில் புடம் போடப்பட்ட அன்னபேதி செந்தூரமும் கூட தீராத மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கொடுத்து குணமாக்க முடியும். இன்னமும் சில சித்த வைத்தியர்கள் இம்முறையை பின்பற்றி மிக சிறந்த முறையில் மக்களை பிணியில் இருந்து காத்துவருக்கின்றனர்.

வெள்ளை கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலையை உணவாகவும் எடுத்துக்கொண்டால் நல்லது. தலை முடி நன்கு வளர கருமையாக இருக்க இவ் வெள்ளை கரிசாலை உதவுகின்றன. இவை ஓர் இயற்கை கூந்தல் தைலமாக இருக்கிறது.

கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் தைலம் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தத்தை சரி செய்து தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் மற்றும் இளநரையையும் சரி செய்யலாம். இக்கரிசாலையை பொற்றகாக கொடுப்பதால் சித்தர்கள் இதனை பொற்றலை என்று அழைக்கின்றனர். 


இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. கரிசாலையின் பயன்களை பற்றியும் மருத்துவ குணப்பற்றியும் எடுத்துச்சொல்ல வார்த்தைகளுள் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வள்ளல்பெருமான் சொன்ன குரு மருந்தை வைத்து எனக்கு தெரிந்த மருந்துகளை எனது அனுபவ முறையில் கையாண்டு மக்களின் பிணியினை நீக்கினேன்.

அதுமட்டுமன்றி கரிசாலையை உண்டு மக்கள் தங்களின் ஞான நிலையை அடைய ஓர் ஊன்றுகோலாக இருக்க விரும்பிய வள்ளல்பெருமான் இதனை கற்ப மூலிகை என்று கூறியுள்ளார். அதனால் அனைவரும் தங்களுடைய உடல் பிணியையும் உள்ளம் பிணியையும் நீக்குவதற்கு இக்கரிசாலையை வள்ளல்பெருமான் சொன்னதுபோல் எவ்வித தந்திரத்தால் உட்க்கொண்டு

மனிதர்களுக்கு வரக்கூடிய பிணியினை நீக்கி, மேல் நிலை அடைந்து அனைவரும் சமரச சுத்த சன்மார்க்கியாக ஆக

வேண்டும் என்ற எனது விருப்பத்தை கூறி வேண்டுகிறேன்.


இத்தகவல்களை தங்களிடம் பகிர்ந்தமைக்கு பெருமை அடைகிறேன்.


இப்படிக்கு 

ச. ஜகத்குரு 

சென்னை.


#ஞான #மூலிகை  #கரிசலாங்கண்ணி

சர்க்கரை நோயினால் ஏற்படும் ஆறாத ரணம், குழிப்புண்களை ஆற்றி குணப்படுத்தும் மூலிகை தைலங்கள்

 *ஜகத்குரு ஐயா அவர்களின் சிறப்பு மருந்துகள் - சர்க்கரை நோயினால் ஏற்படும் ஆறாத ரணம், குழிப்புண்களை ஆற்றி குணப்படுத்தும் மூலிகை தைலங்கள்*


 *புண்களை சுத்தம் செய்யும் முறை* முதலில் திரிபலா கஷாயம் அல்லது படிகார நீர் அல்லது தேங்காய் பால் கொண்டு புண்களை சுத்தம் செய்ய வேண்டும். 

_தேங்காய் பால் கொண்டு சுத்தம் செய்தல் மிகச் சிறந்த முறையாகும்_

 

*தைலம் உபயோகிக்கும் முறை*

பிறகு பின்வரும் தைலங்களில் ஏதேனும் ஒன்றை கோழி இறகில் தொட்டு புண்கள் / ரணத்தின் மேல் மென்மையாக தடவி சிறு துணி கொண்டு கட்டி விட வேண்டும். இதை தினமும் காலை, மாலை, இரவு என மூன்று முறை மேல் பூச்சாக தடவி வந்தால் ‌. விரைவில் ரணங்கள் ஆறி விடும்.  


 #கோபுரந்தாங்கி இலை தைலம்*


சுத்தமான 1 லிட்டர் புங்க எண்ணெயில் 1லிட்டர் கோபுரந்தாங்கி இலை சாற்றை கலந்து நன்கு காய்ச்சி எடுத்தால் _கோபுரந்தாக்கி இலை தைலம்_ தயார். 


*கிணற்றுப்பாசான் / வெட்டுக்காய பூண்டு இலைத் தைலம்*


1 லிட்டர் புங்க எண்ணெயில் 1லிட்டர் வெட்டுக்காய பூண்டு இலைச் சாற்றை கலந்து நன்கு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார்.


 *செவ்வரளி பூ தைலம்* 

2 கைப்பிடி செவ்வரளி பூக்களின் இதழ்களை 1 லிட்டர் புங்க எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார் . 


*ஆடுதீண்டாப்பாளை இலை தைலம்*


200கிராம் ஆடுதீண்டாப்பாளை இலை அரைத்த விழுதினை 1லிட்டர் வேப்ப எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார். 


*கொடுக்காப்புளி / கொடிக்காய் இலை தைலம்*


200 கிராம் கொடுக்காப்புளி இலை அரைத்த விழுதினை 1 லிட்டர் புங்க எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார். 


*மேற்குறிப்பிட்ட வழி முறைகளை சரியாக பின்பற்றிளால் சர்க்கரை நோயினால் உண்டான எப்பேர்ப்பட்ட ரணங்களும் குழிப்புண்களும் ஆறிவிடும் என்பது உறுதி*

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...