கனிமவளக் கொள்ளை
"உண்மையை நீ தேடு"
நாடு நல்ல நாடு
நம்மளோட நாடு
நல்லபடி வாழணுமா
உண்மையை நீ தேடு!
பார்ப்பதற்கு
பசுமையானால்
பயிராகுமா!
படங்களிலே
பழம் இருந்தால்
பசிக்காகுமா!
பண்புகெட்டவன்
பதவி ஏறினால்
நீதி கிடைக்குமா!
வாழ்க வாழ்க
என்று சொன்னால்
வறுமை ஒழியுமா!
களவுபோன
மலைகள் தான்
காட்சி கொடுக்குமா!
காடு மலையை
காக்காதது
அரசாகுமா!
அதை கண்டுக்காமல்
கடப்பவன்
மனிதன் ஆகுமா
பக்தன் வேடம்
போட்டு விட்டால்
பக்தியாகுமா!
தேசபக்தன் என
சொல்லி விட்டால்
தேசம் வளருமா!
தெருவுக்கெல்லாம்
தேசத் தலைவர்
பெயர் வேண்டுமா
தேம்பி அழும்
குழந்தைக்கு சோறு
வேண்டாமா!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக