திங்கள், 28 செப்டம்பர், 2020

திறமையால் மலர்ந்த வாழ்வு

 

"எண்ணத்தை உருவாக்கு, உன் எண்ணம் எட்டும் தூரமே உன் வாழ்வு"

அருள்முகன், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதை அப்பாவிடம் சொன்னால் கண்டிப்பா சந்தோஷப் படுவார். அப்படியே என்னையும் கல்லூரியில் சேர்த்து விடுவார். நானும் கல்லூரியில் சேர ரொம்ப ஆசையோடு இருக்கிறேன், எனத் தனக்கு நெருக்கமான தமிழ் ஆசிரியரிடம் சொல்லினான்.

ஆசிரியரும், நீ பெரிய ஆளா வருவாடா உனக்குள்ளே நிறையத் திறமை இறுக்கு. சீக்கிரமா நல்ல கல்லூரியில் போயிசேர். என்றார் தமிழாசிரியர்.

வீட்டுக்குள் நுழைந்ததும் தன் அப்பாவைத் தேடினான். அப்பா இல்லை. அக்கா அப்பா..வெ எங்க? என்றான். அருள்.

அப்பா வீட்டுக்கு பின்னாடி ஒரு ஆளிடம் பேசிக்கிட்டு இருக்காரு.

என்ன டா விஷயம்? ரிசல்ட் என்நாச்சு? என்றாள் அக்கா.

எல்லாம் நல்ல செய்திதான். என்று சொல்லிவிட்டு.

கல்லூரி சேரும் கனவோடு வீட்டின் பின்னால் இருக்கும் அப்பாவின் அருகில் போய் நிற்கிறான்.

அப்பா முகம் சோர்ந்து இருப்பதைப் பார்த்து.

அருள்முகன் தன் அப்பாவிடம்,

என்ன அப்பா? இரண்டு நாளில் நல்ல முடிவா சொல்லுங்கள். என்று சொல்லிவிட்டு போகிறார். என்றான்.

அதைவிடு. உன்னுடைய ரிசல்ட் என்நாச்சு என்றார் அப்பா.

அதைச் சொல்லத்தான் வந்தேன்.. அப்பா. (பாசாயிடேன்) வெற்றிப் பெற்றுவிட்டேன்.

நல்ல மதிப்பெண் (மார்க்) எடுத்திருக்கிறேன் அப்பா.

சீக்கரம நல்ல கல்லூரியில் சேரனும். என்றான் அருள்முகன்.

அவனின் அப்பாவோ, பன்னிரண்டாம் வகுப்புப் படித்தது போதும். ஏதாவது வேலைக்குப் போகுற வழியைப்பார். என்றார்

இப்போ என்ன வேலை கிடைக்கும் ? இன்னும் ஒரு மூன்று வருசம் படித்து முடிச்சு.. டா. நல்ல வேலைக்குப் போய்விடலாம் அப்பா.. என்றான் அருள்முகன்.

நீ சொல்வதுதெல்லம் சரிதான் பா..

ஆனால்... நமது குடும்ப நிலையைக் கொஞ்சம் நினைச்சுப்பார்.

நாலு வருசத்துக்கு முன்னாடி பெரிய அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனை இன்னும் அடைக்கல.

இப்போ வந்தவரு, கடனைத்தான் கேட்டு வந்தார். பணத்தை இப்போது கொடுக்கிற நிலையில் நாம இல்ல.

என்ன செய்யலாமென நீயே சொல்லு. என்றார் அருள்முகன் அப்பா.

அருள்முகனின் கல்லூரிக் கனவில் இடி விழுந்தது. கண் கலங்கியபடியே வீட்டின் அருகிலிருந்த வேப்பமரத்தின் கீழே போய் அமர்ந்து, என்ன செய்வதென்றே தெரியாமல் வேப்பமரத்திடம் தன் கவலையையும், வேதனை கொட்டினான்

"பட்ட கடனை அடைக்க என் படிப்பு பாதியிலே முடிஞ்சிருச்சு!

பணம் என்னும் பேய் என் கல்வி பயணத்தை மறச்சிருச்சு!"

எனப் புலம்பிய படியே கவலையில் மரத்தடியிலேயே படுத்து தூங்கிவிட்டான்.

இரவு நேரமாகியும் வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை.

அவனுடைய அப்பா அவனைத் தேடி மரத்தடிக்கு வந்து, தூங்கியவனை எழுப்பி. ஆருதல் சொல்லி. சாப்பிட கூட்டீட்டுப் போனார்.

மறுநாள் காலையில். அருள்முகனை, நமக்குக் கடன் கொடுத்தவர் வீட்டுக்கு போ. அவர் வேலை தருகிறேன் னு சொல்லிருக்கிறார். என்றார் அவனின் அப்பா.

என்ன வேலை அப்பா? என எரிச்சலுடன் கேட்டான் அருள்..

இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.

அதைப் பார்த்துக்கிற நல்ல ஆள் வேண்டுமாம். அதனாலே அவர் வேண்டும் எனக் கூப்பிடுகிறார்.

நல்ல சம்பளம் தர்ரேன்னு சொல்கிறார். இல்லேனா கடனை கேட்கிறார் . என்று சொன்னார், அவனோடு அப்பா.

சரி சரி போகிறேன். ஒரு வருசத்தில் கடனை அடைச்சுட்டு. அந்த ஆளை வச்சுகிறேன். எனச் சொல்லிவிட்டு விட்டிலிருந்து புறப்பட்டுப் போறான் அருள்முகன்.

போகிறவழில் அவனுடைய தமிழ் ஆசிரியரை பார்த்திவிட்டான். உடனே வீட்டில் நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்லி விட்டு, கல்லூரியில் சேர முடியாத கவலையோடு நின்றான். அருள்முகன்.

அவனுடைய குடும்ப நிலையை உணர்ந்த ஆசிரியர். முதலில் அருள்முகனின் மனக் அழுத்தைக் குறைக்க நினைத்தார்.

இங்க பார் அருள். உன்னுடைய ஆசிரியராக நான் உன்னை நன்கு அறிவேன்.

உனக்குள் நிறைய ஆற்றல் இருக்கிறது. ஏற்கனவே பலமுறை உன்கிட்ட சொல்லிருக்கிறேன்.

அது தான் உன் இயற்கை திறன்.

"எங்கிருந்தாலும், என்ன வேலை செய்தாலும், உன் இயற்கை திறமையை மட்டும் வளர்த்துக் கொண்டே இரு" அந்த ஆற்றல் உன்னை ஒருநாள் புகழின் உச்சத்திற்குக் கூட்டிச்செல்லும்"

"எவன் ஒருவன் தன் இயற்கை திறமையின் வழியில் செல்கிறானோ அவனை இந்த உலகம் ஒருநாள் போற்றும்". என்கிறார்கள் தத்துவ மேதைகள். என்றார் அவனின் ஆசிரியர்.

அது எப்படி ஐயா?

பட்டம் படித்தால் தானே திறமையை வளர்க்க முடியும். அதன் மூலமாகத் தானே புகழடைய முடியும் எனக் கேட்டான்.

அருள், உன்னைப் போலவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

"பட்டப் படிப்பு படிக்காத பலர் தங்களின் இயற்கை திறனால் கண்டறிந்த, படைத்த, தொகுத்த மற்றும் அவர்கள் சுட்டிக்காட்டிய வற்றைத்தான் உலகின் பல பல்கலைக் கழகங்கள் அவர்களின் பாடத்திட்டத்தில் கற்றுக் கொடுக்கின்றனர்." என்றார் ஆசிரியர்

போன வருடம் நீங்கள் தானே சொன்னீர்கள் எல்லாரும் கண்டிப்பா கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும்-னு. என மறுபடியும் கேட்டான்.

ஆமா, சொன்னோன். அது மட்டுமே வாழ்வின் வெற்றிக்கான தகுதி என நான் சொல்லலையே!

"பட்டப்படிப்பு முடித்துப் பட்டம் பெறுவது மட்டும் வெற்றிக்கான தகுதி அல்ல. ஒருவனைச் சூழ்நிலை கலங்கடிக்கும் போதும். காலம் கடினமான சவால்களைக் கொடுக்கும் போதும் அதை எதிர்கொள்ளும் திறமை" அந்தத் திறமை தான் வெற்றிக்கான தகுதி". அது உன்னிடம் நிறைய இருக்கிறது எனச் சொன்னார் ஆசிரியர்.

அருள்முகன், மனக் கவலையிலிருந்து சற்று விடுபட்டான்.

ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்...

வீட்டிலிருந்து கவலையாக வந்தவனுக்கு, இப்போது மனதில் தைரியம் வந்துவிட்டது. வாழ்வில் திறமையுடன் செயல்பட்டு வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் அவனுள் தோன்றுகிறது. அப்படி நினைத்தபடியே இயற்கை விவசாயப் பண்ணை இருக்கும் இடத்தையும் சென்று அடைந்தான்.

பண்ணையாறே... வணக்கம். நான்தான் வேலைக்கு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டிங்கலாம் ? எனக் கொஞ்சம் கோபத்துடன் கேட்டேன்.

பண்ணைக்காரர்; வாங்கத் தம்பி. உன்னுடைய கோபம் நியாயமானது தான். உங்களை மாதிரி இயற்கையை நேசிக்கின்றவர்கள் தான் இந்த மாதிரியான வேலையெல்லாம் நல்ல படியாகச் செய்வார்கள். நல்ல சம்பளம் கொடுத்தாலும் இயற்கையைப் பற்றின புரிதல் உள்ளவர்கள் கிடைப்பது கடினமாக இருக்கு. அதான் நான் உன்னைக் கேட்டேன். எனச் சொல்லிவிட்டு...

வா தம்பி பண்ணையைச் சுத்தி காட்டுகிறேன் எனக் கூறி பண்ணையையும் ஆட்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அருள்முகனை மட்டும் தனியா கூப்பிட்டு. படிக்க முடியலையே எனக் கவலை வேண்டாம். எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். திறமை இருந்தால் நீ நினைத்தது எல்லாம் உன்னை வந்து சேரும். எனக் கூறினார்

அருள் முகன்; சரி, பாத்துக்கலாம் பண்ணையாரே. எனக் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அவனின் அயராத உழைப்பால் ஒரு வருடத்தில் பண்ணையார் எதிர்பார்த்த லாபத்தைக் கிடைத்தது.

உடனே பண்ணைக்காரர் அருள்முக.. வா எனக் கூப்பிட்டு! 


தொடரும்... பக்கம் 2....

பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. அலோபதி மருத்துவ மரணம்.. ஒரு பார்வை.

2020 ஆகஸ்ட் மாதம், லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவுதான்…

மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போன வரை இவ்வுலகில் இல்லாமல் செய்து விட்டார்கள்...

மருத்துவமனையில் கல்யாணநாள் கொண்டாடினார், இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார்...

2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்துட்டு 
51நாள் கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல கோடி பணம் பெற்றுக் கொண்டு பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்…

யாரும் கேள்வி கேட்க கூடாது…

ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது...

இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்… 

அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது...

யாரையும், ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது...

எந்த ஊடகமும் வாயை திறக்காது... 

ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ செய்திருந்தால் இன்று உலகமே பொங்கி இருக்கும்...

ஒரு மாதத்துக்கு அதுதான் மீடியாவில் டிரண்டிங்காக இருந்திருக்கும்... 

அதுக்கு அப்புறம் அந்த சித்த வைத்தியர் வாழ்க்கை அவ்வளவுதான்... 
சூன்யம்...

ஆனானப்பட்ட அம்மாவையே அமரர் ஆக்கியவங்ககிட்ட பாலு மாத்திரம் எம்மாத்திரம்… 

இவங்க நிலையே இப்படி இருக்கும் போது, சாதாரண ஜனங்கள் மக்களின் நிலை ?

இந்த அலோபதி மருத்துவர்களால் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. 

அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது… 

பண வெறி பிடித்தவர்கள்…

சரி போகட்டும்…
உங்ககிட்ட ஒரு சந்தேகம்…




நம் பாரம்பரிய சித்த வைத்தியரிடம், சித்த வைத்தியம் பார்த்து இதுவரை எத்தனை மரணங்கள் நீங்கள் கண்ணால் பார்த்திருக்கீங்க ?

இல்லையென்றால் உறுதியான ஆதாரத்தோட கேள்வி பட்டிருக்கீங்க ?

அதுபோல் ஆங்கில அலோபதி மருத்துவம் பார்த்து ஒவ்வொரு நாளும் மரணம் இல்லாத உங்கள் ஊர் அரசு/தனியார் பெரிய மருத்துவமனைகளை காண்பிக்க முடியுமா ? 

கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், நேர்மையான ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை கொண்டு சித்த வைத்தியம் பார்த்து இறந்தவர்களை கணக்கு எடுக்க வேண்டும்.

அதே போல் அலோபதி ஆங்கில மருத்துவத்துவம் பார்த்து கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிகழ்ந்த மரணங்களை கணக்கு எடுக்க வேண்டும்...

அப்புறம் தெரியும் ஆங்கில அலோபதி மருத்துவத்தின் கோர முகம்...

* *இதுவரை அலோபதி ஆங்கில மருத்துவத்தால் முழுவதும் குணப்படுத்திய அல்லது இனி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஒரு வியாதியைச் சொல்ல முடியுமா ?* *

ஒரு சித்த வைத்தியரிடம் வந்து இந்த கஷாயத்தை குடித்தால் பக்க விளைவு வருமா என்று கேட்கும் தைரியமும், ஆம்பளைத்தனமும், எந்த ஆங்கில மருத்துவரிடமும் கேட்க துணிவு வருமா ? 

ஏன் அங்கே கேள்வி கேட்க ஆண்மை வருவதில்லை ?

சும்மா எதுக்கு எடுத்தாலும் அரசை மட்டுமே குறை சொல்ல கூடாது... 

அரசு என்பது நம்மால் நாமே ஆட்சி செய்வது... 

நாம் தேர்ந்து எடுத்தவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள்...

அவர்கள் சரியில்லை என்று சொன்னால், காரணம் நாம் சரியான ஆட்களை தேர்வு செய்யவில்லை என்று அர்த்தம்தானே தவிர அவர்கள் மேல் குறையில்லை...

முதலில் நாம் திருந்துவோம்...

குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 500ரூபாய் பணத்துக்கும், நம் மதிப்பில்லா வாக்கை விற்க்காமல், நல்ல ஆட்களை தேர்ந்து எடுப்போம்...

அடுத்து நம் அனைத்து வியாதிகளுக்கும் சித்த வைத்தியத்தை நாடிச் சென்றால் என்ன கெட்டு விடும் ? 

குறைந்த செலவில் அனைவரும் நலமோடு இருப்போம் தானே...

அலோபதி மருத்துவத்தை விபத்து நேரத்தில் மட்டும் ஊறுகாயைப் போல பயன்படுத்திக் கொண்டு மற்ற அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் சித்த வைத்தியம் பார்க்க ஆரம்பித்தால் நம்மை யார் தடுக்க முடியும் ?

நம் ஆரோக்கியம் நம் கையில்...

நாமே சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்வது மாதிரி நாமே அவர்களிடம் காசையும் கொடுத்து வேதனையையும் வாங்கி ஏன் இறக்கணும் ?
நன்றாக யோசியுங்கள்...

2,000ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சித்த வைத்தியத்தை தான் இனி பார்ப்போம் என்றால், இன்று அலோபதி மருத்துவமனையாக இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் 6வருடத்தில் சித்த மருத்துவமனையாக தானாக மாறி விடும்...

எப்படி என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் செக்குல ஆட்டின எண்ணை கிடைக்காது...

ஆனால் இன்றைக்கு ஊர் ஊருக்கு செக்கு இருக்கு, இயற்கை முறையில் ஆட்டிய எண்ணை கிடைக்குது...

அதேபோல் நாம் சித்த வைத்தியத்தை நாடினால் மட்டுமே, ஊர் முழுக்க உள்ள மல்டி ஷ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், இனி சித்த மருத்துவமனைகளாக மாறி விடும் சூழல் அமையும்...

இல்லை என்றால் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாட்டுக்கு பிணவரவு அதிகமாகிவிடும்...
அவ்வளவுதான்...
முடிவு உங்கள் கைகளில்...

பாடும்  நிலா பாலுவின் மருத்துவ போராட்டம் 
நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடமாக இருக்கட்டும்...

இனி இப்படி ஒரு சாவு 
எவர் வீட்டிலும் நிகழாமல் இருப்பது நம் கையில்...

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்.?

( ஒரு மரபுவழி தமிழ் மருத்துவர்)
-முன் அனுப்பல்-

புதன், 23 செப்டம்பர், 2020

நீங்களும் ராஜாவாக உருவாகலாம் (சிறுகதை)

                          "சிங்கம் காட்டுக்கு ராஜாவாக உருவான கதை" 

     மிருகங்களை வைத்து வித்தை காட்டும் இடத்திலிருந்து தன் 5 குட்டிகளுடன் தப்பித்து வந்த சிங்கம். காட்டின் சிங்க ராஜாவிடம் தனக்கு நடந்த இன்னல்களைச் சொல்லி. தன்னையும் கட்டில் சேர்த்துக் கொள்ளும் படி கேட்டது. தப்பித்து வந்த தாய் சிங்கம்.

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, சில அறிவுரை கூறி. காட்டுக்குள் இருக்க அனுமதி வழங்கினார் சிங்க ராஜா.

தப்பித்து நீண்டதூரம் வந்ததால். களைப்பில் அனைத்தும் நல்லா தூங்கிவிட்டன - அரைத்தூக்கத்தில் ஒரு குட்டி மட்டும் முழிச்சு முழிச்சு பார்த்துகிட்டே இருந்தது. அப்படியே பொழுதும் விடிந்து விட்டது.

காலையில் தாய் சிங்கம் எழும்பிய உடனே, இரவு யாருமே உணவு கொண்டு வரவில்லை "அம்மா" நீங்க எல்லாரும் நல்லா தூங்கி விட்டீர்கள். நான் இரவு முழுவதும் முழித்துப் பார்த்தேன். தினம் உணவு கொடுத்தவர்கள் இன்று ஏன் உணவு கொண்டுவரவில்லை? எனக் கேட்டது குட்டி சிங்கம்.

தாய் சிங்கம்;  குட்டிகள் எல்லாத்தையும் ஒன்றாகக் கூப்பிட்டு. பாருங்கள் புள்ளங்களா. இனிமேல் நமக்கு யாரும் சாப்பிட உணவு கொடுக்க மாட்டார்கள். நம்மலாதன் உணவு தேடிச் சாப்பிடவேண்டும். நாம சாப்பிட்டது போக மிச்சத்தை மற்றவர்களுக்காக அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பது காட்டு ராஜாவோட கட்டளை. எனத் தாய் சிங்கம் சொன்னது.

உடனே ஒரு குட்டி;  நாம் தேடிய உணவை ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்களும் நம்மைப் போல உணவு தேடிச் சாப்பிட வேண்டியது தானே. மிச்சம் உள்ளதை எடுத்து வந்தால் நாளைக்குச் சாப்பிடலாமே. எனக் கேட்டது.

தாய் சிங்கம்; இந்தக் கட்டில் உணவு தேட முடியாத நிலையில் பல உயிர்கள் இருக்கிறதாம். அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பது சிங்க ராஜாவின் கட்டளை. அதுமட்டுமல்ல இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதால் பஞ்சமோ, பேர்ஆபத்தோ இந்த இடத்தில் வந்ததே இல்லையாம். புதிதாக வந்த நாமும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். எனக் கூறியது தாய் சிங்கம்.

மற்ற ஒரு குட்டி; போன வருஷம் நாம் இருந்த இடத்தில். நாம இருந்த இடத்திற்கே வந்து உணவு கொடுத்து உதவினார்களே அம்மா. அங்கு மட்டும் ஏன் பஞ்சம் வந்தது. எனக் கேட்டது.

தாய் சிங்கம்; அங்கு நம் சுய உணர்வை மழுங்கடித்து, அடிமைப்படுத்தி நம்மால் அங்கே உணவு தேட முடியாதபடி அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு. அவர்கள் சொல்லும் செயலைமட்டும் செய்ய வேண்டும். வித்தையை (சர்க்கஸ்) காண வரும் மனிதர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் கூடப் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார்கள். தண்ணீரை எல்லாம் பாட்டிலில் அடைத்து வைத்திருப்பார்கள். நம்மைப் போன்ற விலங்குகள் மற்றும் பணம் இல்லாதவர்கள் அங்கு வாழமுடியாது. 

நம் சிங்க ராஜா மாதிரி நல்லவர்கள் இல்லை அவர்கள். அதனால் தான் அந்த மனிதர்கள் வாழும் இடத்தில் பஞ்சமும், பெருநோய்களும் வருகிறது. இதை எல்லாம் பார்த்துச் சகிக்க முடியாமல். உங்களைக் கூட்டிக்கொண்டு சிங்க ராஜா நாட்டுக்குத் தப்பித்து வந்துவிட்டேன். எனத் தாய் சிங்கம் தன் பிள்ளைகளிடம் கூறியது.

வெறோரு குட்டி; யாரென்றே தெரியாத நமக்குத் தங்க இடம் கொடுத்த, சிங்க ராஜா மதாரி அன்புள்ளம் கொண்ட மனிதர்களே இல்லையா அம்மா? எனக் கேட்டது

தாய் சிங்கம்;  நான் இதுவரைக்கும் அப்படிப் பட்ட மனிதர்களைப் பார்த்ததே இல்லை எனச் சொன்னது.

காட்டு ராஜா; அப்போது, மறைவில் நின்று. எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜா சிங்கம்..  பிள்ளைகளை இங்கு வாங்க. உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.எனக் கூப்பிட்டு.  

உங்கள் சிங்க ராஜாவான எனக்கே ஒரு மனிதர்தான் அன்பைச் சொல்லிக் கொடுத்தார். "மனிதர்களில் மகத்தனவர்கள் மண்ணுலகில் உள்ளனர்" எனச் சொன்னது காட்டு ராஜா.

ஒரு குட்டி அது எப்படி? நீங்கள் அவரைச் சாபிடலய? எனக் கேட்டது.

ராஜா சிங்கம்;  நான் அவரைச் சப்பிடத்தான் போனேன். அவர் பக்கத்தில் போனதும் என் மதி மயங்கி, தாய் சிங்கம் குட்டிகளை அன்போடு சுற்றுவது போல நான் அவரைச் சுற்றிக் கொண்டுதான் இருந்தேன். நான் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் அதுவரை அப்படியொரு நபரைப் பார்த்ததே இல்லை! 

எனது இயற்கை குணம் மாறியது போல ஒரு எண்ணம் என்னுள் தோன்றியது. உடனே பயம் வந்துவிட்டது. அப்போது நான். அவரிடம், என்னைக் காப்பாற்றுங்கள் அய்யா. 

நான் எப்படி இப்படி ஆனேன்? என் இயற்கை குணத்தை மீட்டுத் தாருங்கள். எனக் கேட்டேன்.

அதற்கு அந்த மாமனிதர்; சொன்னார் "பெரு நெருப்பின் அருகில் இருப்பதை எல்லாம் பெரு நெருப்பு தன் வயப்படுதிக்கொள்ளும். போலப் பேரன்பு கொண்டு உயிர்கள் மீது கருணைக் காட்டுகின்ற மனிதர்கள் பக்கத்தில் (உன்னைப் போன்ற கொடிய குணம் கொண்டவர்கள் )யார் வந்தாலும் அன்பின் வயப்பட்டு விடுவார்கள்." அதனால் தான் நீ இப்போது அன்பு வயப்பட்டு இப்படி நிற்கிறாய். எனச் சொன்னார்.

ராஜா சிங்கம்; அதற்கு நான், என் இயற்கை குணத்தை எப்படி மீட்பது? எனக் கேட்டேன். 

அந்த மாமனிதர் ; இப்போது இருக்கும் நிலை தான் உன் இயற்கை குணம். அன்பு மட்டுமே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயற்குணம். இந்த இடத்தைவிட்டு நீ போய் விட்டால், உன்னுடன் இடையில் வந்து சேர்ந்த துற்குணங்கள் உன்னை வந்து ஒட்டிக்கொள்ளும். துற்குணங்களால் வாழ்வில் நஷ்டம் மட்டுமே ஏற்படும் எனச் சொன்னார்.

ராஜா சிங்கம்; எனக்கு, வாழ்வில் எதிலுமே நஷ்டம் ஏற்ப்படமல் இருக்க என்ன செய்யவேண்டும்? எனக் கேட்டேன்.

அந்த மாமனிதர்;  அன்பு எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் பிடியில் அகப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் நீ இப்போது அன்பின் பிடியில் அகப்பட்டு இருக்கிறாய். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் கொஞ்ச காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ. நான் சொல்வதை வாழ்வில் கடைப்பிடித்தால் போதும். நீ உன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.

நானும், அவர் சொன்னதை ஏற்று, அவர் காட்டிய வழியில் உயிர்களுக்கு நேசத்துடன் உதவி வாழத் தொடங்கினேன். அன்று முதல் என் வாழ்வில் உயர்வுதான்.

சாதாரண நிலையிலிருந்த என்னை இந்தக் காட்டுக்கே ராஜாவாகும் நிலைக்கு உயர்த்தியது. நீங்களும் பேரன்போடு மற்றவர்களுக்கு உதவி வாழ வேண்டும். என்றது சிங்க ராஜா ..

*இந்த ராஜா சிங்கத்தொட கட்டலையோ ஏற்று இன்று வரைக்கும் உலகில் உள்ள சிங்கங்கள் எல்லாம் உணவு தேடியே உண்ணும். உண்டது போக மிச்சத்தை மற்றவை உண்ணட்டும் என அங்கேயே போட்டுவிட்டு வருகின்றன.

அன்புடன்

 வள்ளலார்மாணவன் NAGA

22/09/2020

::::::::::::::::::::::::::

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய்:12000 அரசு வழங்குகிறது

   அரசுப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் * என்.எம்.எம்.எஸ் * தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு  12000 / - 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை (9 ஆம் வகுப்பு முதல் இடைநிலை வரை) அதாவது 48000 / - 4 வருடம் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி *: - 26-09-2019, *

 தேர்வு தேதி: - * 04-11-2019 

 வலைத்தளம் * www.bse.ap.gov.in *

 முழு விவரங்களுக்கு

       செல்: 8332977207,8332977607

             உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு, ஏழை மாணவர்களுக்கு உதவ உங்கள் பங்கைச் செய்யுங்கள்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 விநாயகர் சதுர்த்தி பாடல்


கந்தனுக்கு முன்பிறந்த கணேசா 

எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் கணேசா...

கணநாத வள்ளலே கணேசா 

எங்களைக் காத்தருள வேண்டும் கணேசா...

கடலைப் பொரி அவலுடன் காண வந்தோம் கணேசா

எங்கள் கவலைகளை நீக்கவேண்டும் கணேசா....

பேரன்புமிக்க வரை கணேசா- நீ

பெருச்சாளி வாகனனே கணேசா...

வாழையடி வாழையாய் வணங்கி வாரோம் கணேசா

வளமுடன் நல்முடன் வாழ வைப்பாய் கணேசா...


            2020  விநாயகர் சதுர்த்தி

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...