திங்கள், 28 செப்டம்பர், 2020

திறமையால் மலர்ந்த வாழ்வு

 

"எண்ணத்தை உருவாக்கு, உன் எண்ணம் எட்டும் தூரமே உன் வாழ்வு"

அருள்முகன், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதை அப்பாவிடம் சொன்னால் கண்டிப்பா சந்தோஷப் படுவார். அப்படியே என்னையும் கல்லூரியில் சேர்த்து விடுவார். நானும் கல்லூரியில் சேர ரொம்ப ஆசையோடு இருக்கிறேன், எனத் தனக்கு நெருக்கமான தமிழ் ஆசிரியரிடம் சொல்லினான்.

ஆசிரியரும், நீ பெரிய ஆளா வருவாடா உனக்குள்ளே நிறையத் திறமை இறுக்கு. சீக்கிரமா நல்ல கல்லூரியில் போயிசேர். என்றார் தமிழாசிரியர்.

வீட்டுக்குள் நுழைந்ததும் தன் அப்பாவைத் தேடினான். அப்பா இல்லை. அக்கா அப்பா..வெ எங்க? என்றான். அருள்.

அப்பா வீட்டுக்கு பின்னாடி ஒரு ஆளிடம் பேசிக்கிட்டு இருக்காரு.

என்ன டா விஷயம்? ரிசல்ட் என்நாச்சு? என்றாள் அக்கா.

எல்லாம் நல்ல செய்திதான். என்று சொல்லிவிட்டு.

கல்லூரி சேரும் கனவோடு வீட்டின் பின்னால் இருக்கும் அப்பாவின் அருகில் போய் நிற்கிறான்.

அப்பா முகம் சோர்ந்து இருப்பதைப் பார்த்து.

அருள்முகன் தன் அப்பாவிடம்,

என்ன அப்பா? இரண்டு நாளில் நல்ல முடிவா சொல்லுங்கள். என்று சொல்லிவிட்டு போகிறார். என்றான்.

அதைவிடு. உன்னுடைய ரிசல்ட் என்நாச்சு என்றார் அப்பா.

அதைச் சொல்லத்தான் வந்தேன்.. அப்பா. (பாசாயிடேன்) வெற்றிப் பெற்றுவிட்டேன்.

நல்ல மதிப்பெண் (மார்க்) எடுத்திருக்கிறேன் அப்பா.

சீக்கரம நல்ல கல்லூரியில் சேரனும். என்றான் அருள்முகன்.

அவனின் அப்பாவோ, பன்னிரண்டாம் வகுப்புப் படித்தது போதும். ஏதாவது வேலைக்குப் போகுற வழியைப்பார். என்றார்

இப்போ என்ன வேலை கிடைக்கும் ? இன்னும் ஒரு மூன்று வருசம் படித்து முடிச்சு.. டா. நல்ல வேலைக்குப் போய்விடலாம் அப்பா.. என்றான் அருள்முகன்.

நீ சொல்வதுதெல்லம் சரிதான் பா..

ஆனால்... நமது குடும்ப நிலையைக் கொஞ்சம் நினைச்சுப்பார்.

நாலு வருசத்துக்கு முன்னாடி பெரிய அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனை இன்னும் அடைக்கல.

இப்போ வந்தவரு, கடனைத்தான் கேட்டு வந்தார். பணத்தை இப்போது கொடுக்கிற நிலையில் நாம இல்ல.

என்ன செய்யலாமென நீயே சொல்லு. என்றார் அருள்முகன் அப்பா.

அருள்முகனின் கல்லூரிக் கனவில் இடி விழுந்தது. கண் கலங்கியபடியே வீட்டின் அருகிலிருந்த வேப்பமரத்தின் கீழே போய் அமர்ந்து, என்ன செய்வதென்றே தெரியாமல் வேப்பமரத்திடம் தன் கவலையையும், வேதனை கொட்டினான்

"பட்ட கடனை அடைக்க என் படிப்பு பாதியிலே முடிஞ்சிருச்சு!

பணம் என்னும் பேய் என் கல்வி பயணத்தை மறச்சிருச்சு!"

எனப் புலம்பிய படியே கவலையில் மரத்தடியிலேயே படுத்து தூங்கிவிட்டான்.

இரவு நேரமாகியும் வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை.

அவனுடைய அப்பா அவனைத் தேடி மரத்தடிக்கு வந்து, தூங்கியவனை எழுப்பி. ஆருதல் சொல்லி. சாப்பிட கூட்டீட்டுப் போனார்.

மறுநாள் காலையில். அருள்முகனை, நமக்குக் கடன் கொடுத்தவர் வீட்டுக்கு போ. அவர் வேலை தருகிறேன் னு சொல்லிருக்கிறார். என்றார் அவனின் அப்பா.

என்ன வேலை அப்பா? என எரிச்சலுடன் கேட்டான் அருள்..

இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.

அதைப் பார்த்துக்கிற நல்ல ஆள் வேண்டுமாம். அதனாலே அவர் வேண்டும் எனக் கூப்பிடுகிறார்.

நல்ல சம்பளம் தர்ரேன்னு சொல்கிறார். இல்லேனா கடனை கேட்கிறார் . என்று சொன்னார், அவனோடு அப்பா.

சரி சரி போகிறேன். ஒரு வருசத்தில் கடனை அடைச்சுட்டு. அந்த ஆளை வச்சுகிறேன். எனச் சொல்லிவிட்டு விட்டிலிருந்து புறப்பட்டுப் போறான் அருள்முகன்.

போகிறவழில் அவனுடைய தமிழ் ஆசிரியரை பார்த்திவிட்டான். உடனே வீட்டில் நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்லி விட்டு, கல்லூரியில் சேர முடியாத கவலையோடு நின்றான். அருள்முகன்.

அவனுடைய குடும்ப நிலையை உணர்ந்த ஆசிரியர். முதலில் அருள்முகனின் மனக் அழுத்தைக் குறைக்க நினைத்தார்.

இங்க பார் அருள். உன்னுடைய ஆசிரியராக நான் உன்னை நன்கு அறிவேன்.

உனக்குள் நிறைய ஆற்றல் இருக்கிறது. ஏற்கனவே பலமுறை உன்கிட்ட சொல்லிருக்கிறேன்.

அது தான் உன் இயற்கை திறன்.

"எங்கிருந்தாலும், என்ன வேலை செய்தாலும், உன் இயற்கை திறமையை மட்டும் வளர்த்துக் கொண்டே இரு" அந்த ஆற்றல் உன்னை ஒருநாள் புகழின் உச்சத்திற்குக் கூட்டிச்செல்லும்"

"எவன் ஒருவன் தன் இயற்கை திறமையின் வழியில் செல்கிறானோ அவனை இந்த உலகம் ஒருநாள் போற்றும்". என்கிறார்கள் தத்துவ மேதைகள். என்றார் அவனின் ஆசிரியர்.

அது எப்படி ஐயா?

பட்டம் படித்தால் தானே திறமையை வளர்க்க முடியும். அதன் மூலமாகத் தானே புகழடைய முடியும் எனக் கேட்டான்.

அருள், உன்னைப் போலவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

"பட்டப் படிப்பு படிக்காத பலர் தங்களின் இயற்கை திறனால் கண்டறிந்த, படைத்த, தொகுத்த மற்றும் அவர்கள் சுட்டிக்காட்டிய வற்றைத்தான் உலகின் பல பல்கலைக் கழகங்கள் அவர்களின் பாடத்திட்டத்தில் கற்றுக் கொடுக்கின்றனர்." என்றார் ஆசிரியர்

போன வருடம் நீங்கள் தானே சொன்னீர்கள் எல்லாரும் கண்டிப்பா கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும்-னு. என மறுபடியும் கேட்டான்.

ஆமா, சொன்னோன். அது மட்டுமே வாழ்வின் வெற்றிக்கான தகுதி என நான் சொல்லலையே!

"பட்டப்படிப்பு முடித்துப் பட்டம் பெறுவது மட்டும் வெற்றிக்கான தகுதி அல்ல. ஒருவனைச் சூழ்நிலை கலங்கடிக்கும் போதும். காலம் கடினமான சவால்களைக் கொடுக்கும் போதும் அதை எதிர்கொள்ளும் திறமை" அந்தத் திறமை தான் வெற்றிக்கான தகுதி". அது உன்னிடம் நிறைய இருக்கிறது எனச் சொன்னார் ஆசிரியர்.

அருள்முகன், மனக் கவலையிலிருந்து சற்று விடுபட்டான்.

ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்...

வீட்டிலிருந்து கவலையாக வந்தவனுக்கு, இப்போது மனதில் தைரியம் வந்துவிட்டது. வாழ்வில் திறமையுடன் செயல்பட்டு வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் அவனுள் தோன்றுகிறது. அப்படி நினைத்தபடியே இயற்கை விவசாயப் பண்ணை இருக்கும் இடத்தையும் சென்று அடைந்தான்.

பண்ணையாறே... வணக்கம். நான்தான் வேலைக்கு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டிங்கலாம் ? எனக் கொஞ்சம் கோபத்துடன் கேட்டேன்.

பண்ணைக்காரர்; வாங்கத் தம்பி. உன்னுடைய கோபம் நியாயமானது தான். உங்களை மாதிரி இயற்கையை நேசிக்கின்றவர்கள் தான் இந்த மாதிரியான வேலையெல்லாம் நல்ல படியாகச் செய்வார்கள். நல்ல சம்பளம் கொடுத்தாலும் இயற்கையைப் பற்றின புரிதல் உள்ளவர்கள் கிடைப்பது கடினமாக இருக்கு. அதான் நான் உன்னைக் கேட்டேன். எனச் சொல்லிவிட்டு...

வா தம்பி பண்ணையைச் சுத்தி காட்டுகிறேன் எனக் கூறி பண்ணையையும் ஆட்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அருள்முகனை மட்டும் தனியா கூப்பிட்டு. படிக்க முடியலையே எனக் கவலை வேண்டாம். எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். திறமை இருந்தால் நீ நினைத்தது எல்லாம் உன்னை வந்து சேரும். எனக் கூறினார்

அருள் முகன்; சரி, பாத்துக்கலாம் பண்ணையாரே. எனக் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அவனின் அயராத உழைப்பால் ஒரு வருடத்தில் பண்ணையார் எதிர்பார்த்த லாபத்தைக் கிடைத்தது.

உடனே பண்ணைக்காரர் அருள்முக.. வா எனக் கூப்பிட்டு! 


தொடரும்... பக்கம் 2....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...